
சென்னை: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (18). ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த 11-ம் தேதி, வழக்கம்போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். ராமாபுரம் ஆறுமுகம் தெருவில் சென்றபோது, வாகனம் நிலைதடுமாறி, தடுப்பின் மீதுமோதியது. கீழே விழுந்த ஆகாஷ்ராஜின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, ஆகாஷ்ராஜை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ET54Pfa
0 Comments