Crime

சென்னை: சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பிஹாரை சேர்ந்த கட்டிட தொழிலாளியை தனிப்படைபோலீஸார் கைது செய்தனர். சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபல ரவுடிகள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு கடந்த 13-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் 20 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள், ஒரு ஏர்கன் துப்பாக்கி, 11 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CIGf9jx

Post a Comment

0 Comments