
சென்னை: சென்னை எருக்கஞ்சேரி சூழ்புனல்கரை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசீத் ( 65 ). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலில் தீ வைத்து வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அப்துல் ரசீத், இது குறித்து கொடுங்கையூர் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, வியாசர் பாடி எம்கேபி நகரை சேர்ந்த கரண் ( 24 ) என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், கரணின் நண்பரான பிரகாஷ் என்பவர், அப்துல் ரசீத் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zSJLyjc
0 Comments