
சென்னை: குழந்தைகள் கடத்தப்படுவதுபோல சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது போலவும், கடத்தப்படும் குழந்தைகளை கொலை செய்து, உடல் உறுப்புகளை திருடுவது போலவும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோக்கள் குறித்து சென்னை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த வீடியோக்கள் பொய்யானது என தெரிய வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vJ0Ljc1
0 Comments