Crime

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில், வெளிநாட்டிலிருந்து வந்தது தெரியவந்தது. எனவே, மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தேவைப்பட்டால் சர்வதேச போலீஸாரின் உதவியையும் சென்னை போலீஸார் நாட முடிவு செய்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xZ4hO8G

Post a Comment

0 Comments