
சென்னை: அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு பறந்து வந்து விழுந்த ட்ரோனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்துக்குள் நள்ளிரவு 12.30 மணியளவில் எங்கிருந்தோ பறந்து வந்த ட்ரோன் ஒன்று விழுந்தது. இதைக் கண்டு அக்குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த ட்ரோன் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qB0Ksv8
0 Comments