Crime

மதுரை: உசிலம்பட்டி அருகே ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள் (70). இவர்களுக்கு நமக்கோடி (52), தனிக்கொடி(50) என்ற மகன்களும், ஈஸ்வரி(43) என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் நமக்கோடிக்கு திருமணமாகி, பிள்ளைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 8 ஆண்டாக நமக்கோடி அவரது தாயாருடன் வசிக்கிறார். மது பழக்கமுள்ள அவர், தாயாரிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினமும் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xOfQCRA

Post a Comment

0 Comments