
சென்னை: தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்திமுனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை ராமாபுரம், பாரதி சாலை, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் கடந்த 25-ம்தேதி காலை, வீட்டினருகே, ராமாபுரம், வள்ளுவர் சாலை சந்திப்புஅருகே நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரவிச்சந்திரனை கத்திமுனையில் மிரட்டி,அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டுத் தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26MaQqs
0 Comments