Crime

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் சந்திர கபூரின் கூட்டாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, 8 உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து ஏராளமான பழமைவாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு கடத்தப் பட்டது தொடர்பாக, தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில்,பெரும்பாலான சிலைகள் கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டது அமெரிக்க குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் ( 73 ) என்பது தெரிய வந்தது. வெளி நாடுகள் மட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சிலை கடத்தல் வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ij4T3HM

Post a Comment

0 Comments