
விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் உறுதி செய்தது.
2021-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், அப்ேபாதைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dcL4s0i
0 Comments