
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜகவை சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூரைச் சேர்ந்தவர் நல்ல கண்ணு ( 50 ). இவருக்கு சுப்பிரமணிய புரத்தில் சொந்தமாக வாழைத் தோட்டம் உள்ளது. ஓபிஎஸ் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளராக செயல்பட்டு வந்தார். நல்லகண்ணு நேற்று காலை வாழைத் தோட்டத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் - சுப்பிரமணியபுரம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VrI613z
0 Comments