Crime

சென்னை: அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக ஒரே மாதத்தில் 957 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டம், சிறப்புபொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களும் அத்தியாவசியப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், அவர்களுக்கு உடந்தையாகசெயல்படுவோர் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gqjfFIi

Post a Comment

0 Comments