
தென்காசி: தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப் பணத்தை தராததால், 80 வயது தாயைக் கொன்ற தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மனைவி சிவந்திப்பூ (80). இவரது மகன்கள், மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் இறந்துவிட்டதால், சிவந்திப்பூ தனியாக வசித்து வந்தார்.
இவரது மூத்த மகன் முருகன் (50). தொழிலாளியான இவர் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை சிவந்திப்பூ நேற்று ரேஷன் கடையில் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த முருகன், அரசு வழங்கிய ரூ.1,000 பணத்தைக் கேட்டு, தாயாரிடம் தகராறு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f7iKR5N
0 Comments