Crime

புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து கொலை, வெடிகுண்டு வீச்சு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடரும் குற்றச்சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளது. இதனைத் தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் துணை நகரமாக வில்லியனூர் உள்ளது. வில்லியனூர் அருகே உள்ள பத்துக் கண்ணு, கூடப்பாக்கம், பிள்ளையார் குப்பம், தொண்டமானத்தம், ராமநாதபுரம், வி. மணவெளி, ஒதியம்பட்டு, உளவாய்க்கால், ஆரியபாளையம், அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வில்லியனூர் - விழுப்புரம் சாலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என 20 பேர் பணியில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Uex4EHb

Post a Comment

0 Comments