
உதகை: உதகை அருகே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியின் 9 வயது மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடுமுறை தினம் என்பதால் தோழிகளுடன் திருவிழாவில் கலந்து கொண்டு, நேற்று முன்தினம் மாலை சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அஜித் ( 23 ) என்ற இளைஞர், சிறுமியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lpQST1E
0 Comments