Crime

அம்பலூர்: வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற தந்தை, சகோதரர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது பெண்ணின் கணவர் நேற்று புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு ( 21 ) பட்டியலின இளைஞர். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நர்மதா ( 20 ) என்பவரை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த டிச. 6- ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KiB7Za6

Post a Comment

0 Comments