
நாகர்கோவில்: குலசேகரம் அருகே வெண்டலி கோட்டில் கனிமவளம் ஏற்று வதற்காக சென்ற லாரி மோதி பெண் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த மக்கள், பெண் ணின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப் பட்டு வருவதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. தினமும் குமரி மாவட்டம் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான எடையுடன், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், சாலைகள் பழுதடைகின்றன. விபத்துகள் தினமும் நிகழ்கின்றன. இதனைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mx8Bj5N
0 Comments