
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் 26-ம் தேதி நள்ளிரவு வரை உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப் படுகிறது.
இந்நிலையில், உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள் மர்ம ஒருவர் உள்ளே சென்று பல மணி நேரம் சுற்றி அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில், நேற்று மாலை சுமார் 35 வயதுள்ள மர்ம நபர், பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் சுற்றிக் கொண்டு இருந்தார். அவர் நீண்ட நேரமாக பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் ஒவ்வொரு கவுண்டர்களாக சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F2dShxJ
0 Comments