
சென்னை: சென்னையில் ரூ.23.25 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் சிலர் சைக்கோட்ரோபிக் போதைப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடியின் சென்னை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LtxEfnr
0 Comments