
சென்னை: தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து தலைமறைவானதாகக் கூறப்படும் உரிமையாளர்கள், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்த முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ”சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ‘குபேரன் அறக்கட்டளை’ என்றபெயரில் தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தவர்கள் ரங்கா ரெட்டி, அவரது மனைவி ஜெய லட்சுமி மற்றும் குடும்பத்தினர். இவர்கள் தங்கம் மற்றும் வீட்டு மனைகள் தருவதாகக் கூறி வாரம் ரூ.250 வசூலித்துள்ளனர். 300-வது வார முடிவில் 3 பவுன் தங்கம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HpLcxCg
0 Comments