
கானாத்தூர்: கடலில் குளித்தபோது அலை இழுத்து சென்ற 5 பேரில் இருவரது உடல்கள் நேற்று கரை ஒதுங்கியுள்ள நிலையில், மாயமான இருவரது உடல்கள் மீட்கப்பட்டன.
சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சிவதாணு ( 46 ), இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணி புரிகின்றனர். புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் அனைவரும் நேற்று முன் தினம் கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர். பின்னர் மாலை கானாத்தூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் நண்பர்கள் குளித்து விளையாடிய போது நவீன் ( 26 ), மானஸ் ( 18 ), பிரசாந்த் ( 18 ), நிவேதிதா ( 18 ) ஆகிய நான்கு பேர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8XVaYtc
0 Comments