Crime

சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த 2 வாரங்களில் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யகாவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்புநடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், பதுக்குவோர், கடத்துபவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் கடந்த மாதம்27-ம் தேதி முதல் இந்த மாதம் 10-ம் தேதி வரையிலான 2 வாரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 40.8 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 3,623 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 5 செல்போன்கள், 10இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 1 இலகுரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xq1u2HW

Post a Comment

0 Comments