Crime

போபால்: மத்திய பிரதேசத்தின் குணா நகர், ராதாபூர் காலனியை சேர்ந்தவர் மிருதுஞ்சய் ஜடோன். சில நாட்களுக்கு முன்பு அவர், அங்குள்ள கடையின் முன்பு அமர்ந்து நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இரு நாய்க்குட்டிகள் அவருக்கு அருகே சென்றன.

ஆத்திரமடைந்த அவர், ஒரு நாய்க்குட்டியை கையால் தூக்கி ஓங்கி தரையில் வீசினார். பின்னர் அந்த நாய்க்குட்டியை கால்களால் மிதித்து மிகக் கொடூரமாக கொலை செய்தார். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அவரது கொடூர செயல் பதிவானது. கடந்த 9-ம் தேதி சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DcCMU0S

Post a Comment

0 Comments