
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ளவரதராஜ பெருமாள் கோயிலில் வைத்திருந்த 2 செம்பு சிலைகள்திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது தொல்லியல் வல்லுநர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீஅருள்மிகு சத்திய வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் செயல் அலுவலராக இருக்கும் குமரேசன்(50), அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். அதில், ``இக்கோயிலில் பொறுப்பேற்றது முதல் கோயிலில் உள்ள பொன், வெள்ளி இனங்கள் மற்றும்உற்சவ உலோக சிலைகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uJmw4lx
0 Comments