Crime

சென்னை: சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்களை கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸாருக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பிரிவு இயக்குநர் அரவிந்தன் உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர கண்காணிப்பு, ரோந்து, வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும் வகையிலான விடுதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெளிநாட்டினர், வெளி மாநிலத்தினர் தங்கி உள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TCrHjSb

Post a Comment

0 Comments