Crime

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை ஜன.11-ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் சுரேஷ் பாபு. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wmVtpMK

Post a Comment

0 Comments