
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் நாயக் (28). 2012-ல் ஒரு கொலை வழக்கில் கைதாகி உள்ளார். விடுதலையான பின்னர், சில இடங்களில் வேலை பார்த்துள்ளார். இவரது சிறை வாழ்க்கை குறித்து அறிந்ததும் வேலை பறிபோய் உள்ளது.
இதனால் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட தொடங்கி உள்ளார். திருடிய பணத்தில். ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்துள்ளார். சங்கர் நாயக் ஒருமுறை திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர், போலீஸில் புகார் அளிக்கையில் திருடு போன நகை எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jmZ2zbQ
0 Comments