Crime

சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என கூறியது. இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rzgk3xq

Post a Comment

0 Comments