
சென்னை: சீருடையில் சென்று பொது மக்களை மிரட்டி தீபாவளி பண வசூலில் ஈடுபட்ட போலி காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வடபழனி போலீஸார் அதே பகுதி திருநகர் 1-வது தெரு மற்றும் 100 அடிசாலை சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் (புல்லட்) அருகில் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். சந்தேகம் அடைந்த வடபழனி போலீஸார் அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P6K5Zdt
0 Comments