
சென்னை: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக சென்னையில் 2 அமெரிக்க இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 2 அமெரிக்க இளைஞர்கள், அங்குள்ள பாரில் மது அருந்தி உள்ளனர். போதை அதிகமானதும் இருவரும் பாரில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகம், பாது காவலர்கள் உதவியுடன் 2 இளைஞர்களையும், ஆட்டோவில் ஏற்றி, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VeM5kz1
0 Comments