Crime

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன் டேவிட். இவரின் மகள் சரோஜ் பெனிட்டா (21), சென்னை அண்ணா பல்கலை விடுதியில் தங்கி, கட்டிடக் கலை (பி.ஆர்க்) 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறையில் சரோஜ் பெனிட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் நடத்திய விசாரணையில், சரோஜ் பெனிட்டாவுக்கு அதிக அரியர்கள் இருந்ததாகவும், இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும், மாணவி, அவரது பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அவரது அறையில் கைப்பற்றியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WxC5MP1

Post a Comment

0 Comments