
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் இருவருக்குள் நடந்த முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி திருவிக தெருவில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். அதில் ஒருவர் கழிவுநீர் கால்வாயில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். ஒருவர் தப்பியோடி விட்டதாக அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, கழிவுநீர் கால்வாயில் விழுந்தவர் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதி மக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தீபாவளி தினத்தில் இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்டது தெரியவந்தது. இறந்து போன நபர் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால கண்ணன் (26) என்பதும், இவர் மீது வாகனத் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TV7xOhC
0 Comments