
ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் ரூ.30 கோடி வரை முதலீடு பெற்றுமோசடி செய்த ஈரோடு நிதி நிறுவனம் தொடர்பான வழக்கு, பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளது.
ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் ராணுவத் தினர் பலரும் பணத்தை முதலீடு செய்தனர். எம்.எல்.எம். முறையில், முன்னாள் ராணுவத்தினரைக் குறிவைத்து இந்த நிறுவனத்தினர் முதலீடுகளை பெற்றுள்ளது. இவ்வாறு முதலீடு பெற்ற நிதி நிறுவனத்தினர், கடந்த 2 ஆண்டுகளாக ஒப்புக்கொண்டபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sWQeuOC
0 Comments