
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு நடைபெற்ற கிரிப்டோ கரன்சி ஊழலில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் அரசு ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் ‘கோர்வியோ காயின்’ அல்லது ‘கேஆர்ஓ காயின்’ என்ற பெயரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்தவர், மற்ற நபர்களை இந்த திட்டத்தில் சேர்த்து விட்டதால், அவர்களுக்கு நல்ல கமிஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பல ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீஸாரும் இணைந்து ஏஜென்டுகளாக செயல்பட்டுள்ளனர். நல்ல கமிஷன் கிடைத்ததால், சிலர் போலீஸ் வேலைக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டு, கேஆர்ஓ காயின்ஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களை சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oQ2NAJ6
0 Comments