
மேட்டூர்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணம் இழந்ததால், மேட்டூர் அடுத்த பண்ணவாடி காவிரி ஆற்றில் குதித்து ஓசூர் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பண்ணவாடியில் பாறையின் மீது செல்போன், காலணி, கடிதம், பை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவற்றை எடுக்க யாரும் வராததால், மீனவர்கள் கொளத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த பொருட்களை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wYOAasG
0 Comments