
நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற புகாரின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவர் மற்றும் இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி தினேஷ்(29). இவரது மனைவி நாகதேவி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நாகதேவிக்கு கடந்த 7-ம் தேதி சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமடைந்து வீடு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n190KVm
0 Comments