
சென்னை: ஒடிசா மாநிலம் கந்தாமால் மாவட்டம் ஹஜூரிபடா பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர் கன்ஹார். இவரது மனைவி நந்தினி கன்ஹார்.இவர்கள் திருப்பதியில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தினி கன்ஹார் சொந்த ஊருக்குச் செல்வதற்காக தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். தொடர்ந்து, ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயிலில் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் காத்திருந்தார். அப்போது, நந்தினி கன்ஹாரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தஇருவர் பேச்சுக் கொடுத்தனர். பிறகு,அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்ககுழந்தையுடன் நந்தினி தூங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CIPs0vY
0 Comments