Crime

மதுரை: கருப்பாயூரணி, சக்கிமங்கலம் பகுதியில் திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 180 பவுன், ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனிப்படையை எஸ்பி சிவபிரசாத் பாராட்டினார்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி, சிலைமான் பகுதியில் கடந்த 2021 முதல் 3 ஆண்டாக திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்தது. இவ்வாண்டில் மட்டும் அப்பகுதியில் சுமார் 12 வழக்குகள் பதிவாகின. ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களே இச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீஸ் சந்தேகித்தது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் மோகன், எஸ்ஐக்கள், குமரகுரு, கார்த்திக், காவலர்கள் காந்தி, கருப்பு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mbufXLV

Post a Comment

0 Comments