
சென்னை: தலைமறைவாக இருந்த மும்பைபோதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பையில் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வலம் வந்தவர் லலித் பாட்டீல். கடந்த 2020-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்புடைய போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இவர் மற்றும் அவரது கூட்டாளிகளை மும்பை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக லலித் பாட்டிலுக்கு சர்வதேச அளவிலான கும்பலுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jAaHF5M
0 Comments