Crime

சென்னை: போலியாக பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை முன்னாள் காசாளருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2011-12 காலகட்டத்தில் கொரட்டூரைச் சேர்ந்தஆர்.ஸ்ரீதர் (43), இரவு நேர காசாளராக பணிபுரிந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்து செல்லும் வெளிநோயாளிகளிடம் இருந்து சி.டி. ஸ்கேனுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுத்ததுபோல போலியாக பில் தயாரித்து, ரூ.23.88 லட்சத்தை மோசடி செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமைந்தகரை போலீஸார் நம்பிக்கை மோசடி, போலியாக பில் தயாரித்தல், கணக்கு ஆவணங்களில் மோசடி செய்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து தரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f8kujXW

Post a Comment

0 Comments