
இம்பால்: இடஒதுக்கீடு தொடர்பாக கலவரம் நடைபெற்ற மணிப்பூரின் முர்ரே நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு புதிதாக ஹெலிபேட் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகளை பார்வையிட மணிப்பூர் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் முர்ரே நகருக்கு நேற்று சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த குகி சமுதாயத்தை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்த் குமார்பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து குகி தீவிரவாதிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/COx9tT8
0 Comments