Crime

மதுரை: கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், அவர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் சமீபத்தில் காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றார். அப்போது அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் மருதுசேனை தலைவர் ஆதி நாராயணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆதிநாராயணன் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a54dFKk

Post a Comment

0 Comments