
கோவை: தனியார் நிறுவன நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானோர் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் நேற்று புகார் அளிக்க திரண்டனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் (யுடிஎஸ்) என்ற தனியார் நிறுவனம், அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக விளம்பரம் செய்து தமிழகம் முழுவதும் சுமார் 76 ஆயிரம் பேரிடம் பணம் திரட்டி யது. ஆனால் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9sRnLAO
0 Comments