Crime

சேலம்: சேலம் ஓமலூர் அருகே கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பூசாரி திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. இதையடுத்து, பூசாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பழமையான முத்தாளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும், அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக் கிழமை உள்ளிட்ட முக்கியமான நாட்களில் விஷேச பூஜை நடத்தப்படும். சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ubkDW6

Post a Comment

0 Comments