
திருப்பூர்: காங்கயத்தில் மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன், தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: காங்கயம் - திருப்பூர் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில், மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன் மற்றும் தனி நபர் கடன் வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தினர். கடன் பெறுவதற்கு காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் எனவும், ஒரு குழுவில் 10 பேர் இருந்தால் நபர் ஒருவர் ரூ.1,340 வீதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MuHJGb0
0 Comments