
செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளை கடந்து செல்கிறது. வழக்கம் போல நேற்று சோழன் விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்து பயணிகள் ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AxfPz71
0 Comments