
வேலூர்: குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் உடல் இருப்பதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு அக்.13-ம் தேதி தகவல் கிடைத்தது.
அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமை யிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7Mcidxq
0 Comments