
சென்னை: சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம புரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (49). இவர் மீது 7 கொலை வழக்கு உள்பட 40 குற்றவழக்குகள் இருந்தது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேலூர் மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்தார். வழக்கு விசாரணைக்காக மட்டும் சென்னைக்கு அவ்வப்போது வந்து சென்றார்.
அதன்படி, கடந்த ஆக. 18ம் தேதிவழக்கு விசாரணைக்காக எழும்பூர்நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர், மாலையில் உணவருந்த பட்டினப்பாக்கம் கடற்கரை சென்றார். அப்போது, அவரை காரில் தொடர்ந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Q5l1gd
0 Comments