Crime

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி லீலாவதி(45). இவர், ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் சாலை வழியாக நேற்று முன்தினம் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள திரையரங்கு அருகே சென்றபோது, பின்புறமாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லீலாவதியின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் லீலாவதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1Icjxez

Post a Comment

0 Comments