
மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி, சேலம் எஸ்.பி அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தினர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஏழுபரணை காட்டைச் சேர்ந்தவர் ராமசாமி (70), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு மல்லிகா (45) என்ற மகளும் பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கொளத்தூரில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தம்பதியினர் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ராமசாமி எழுந்து அருகில் உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/swJj07X
0 Comments